Tuesday, June 14, 2022

சொல்லடி சிவசக்தி

 விடிகிற விடியல் எல்லாம் விடியலை நோக்கியே என்றோர் கனமிருந்தது. இன்றும் விடிகிறது. விடியலுக்கான விடியலாகத் தான் இல்லை. திறந்த மனம் இருந்ததோர் காலம். அன்று எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவம், உந்துதல் இருந்தது. தேக்கம் என்பது ஆட்கொண்டவுடன் வாழ்க்கையின் ஓட்டம் எங்கோ நின்றுவிட்டது. புது வேகம், புத்துணர்வு, புது நோக்கம், புது பார்வை, புது அர்த்தமுள்ள வாழ்வு- இவையே மனம் தேடும் மாற்றம். இத்தனை 'புது'வுக்குமான ஓர் அந்த ஓர் உந்து சக்தி எங்கிருக்கிறது? பாரதி கேட்ட அதே- சொல்லடி சிவசக்தி.

சிவசக்தியால் இயலாததையும் இயங்க செய்கிறது இசை.

No comments:

Post a Comment