Sunday, September 23, 2012

தற்காலிக மனிதர்கள்


     ஓடுகின்ற வாழ்க்கையில் எதை பாடம் என்பது, எதை அனுபவம் என்பது? அதை புகட்டுகிற மனிதர்களில் எத்தனை வேறுபாடுகள். இவர்களை கவனிக்கவும் முடியாது, கவனிக்காமல் இருக்கவும் முடியாது. இவர்களிடம் கல்லைக்/ களிமண்ணைக் கொடுத்தால் கூட அதற்கும் கோபம், இறுக்கம், அழுகை ஆகியவற்றை உணரச்செய்திடுவர். இவற்றை ஆகப்பாதைகோ, அழிவுப்பாதைகோ எடுத்துச்செல்வது அந்தக் களிமண்ணைப் பொருத்தது. பொறுமை எருமையை விட பெரியது என்றும், நிலம்போல் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலையென்றும், நிரந்தரம் என்ற உலகிலல்லவா இவர்கள் என்னை தூக்கிஎரிந்துவிட்ட தற்காலிகமானவர்கள் என்றும், ஆக்கப்பொருத்தவன் ஆறவும் பொறுக்கணும் என்றும், மேதைகள்/ அறிவாளிகள் போல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இவையாவும் அனுபவத்தால் விழைந்த வார்த்தைகள் என்றபோதும் அவர்களின் காரணம் பெரியது. இங்கு அற்ப காரணங்கள். ஆதலால் பக்குவமடைய நேரமும், காலமும் கூடுதலாக செலவடைகிறது. தன்னைப்போல் பிறரையும் நேசி- ஆங்கிலத்தில் Empathy, சிறிய வார்த்தை பெரிய பொருளடக்கம். இது நடந்தேருமாயின் மனிதர்கள் மாமனிதர்களாகிவிடுவர்.

     மனித உருவம் கொடுத்து பல கைகள், கொடுத்து வாசனை திரவியங்கள், மாலை, சில நேரங்களில் பழங்கள்- இவையெல்லாம் கொடுத்து கடவுள் என்று நம்புவர்! நேரம் போவது தெரியாமல் மன்றாடி என் கஷ்டத்திற்கு காரணம்/வடிவம்/தீர்வு சொல் என்று கண்ணீர் வற்றும்வரை அழுவர். அவர்களுக்கு தெரிவதில்லை அந்தக்கடவுள் மௌனமாய் இருந்து இதைத்தான் சொல்கிறதென்று : ' சக மனிதனின் மனதை, கண்ணீரை புரிந்துகொள்வதில்தான் உன் தீர்வு  இருக்கிறது '. பக்தி மார்கத்தில் போவதால் என்னவோ இன்னும் சுயனலப்படுகிறது மனது, ஞான மார்கத்தில் சென்றால் பொதுவுடைமை ஏற்படுமோ? தீர்கமாக இல்லாவிட்டாலும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சாத்தியக்கூறுகளில் நானும் இருப்பதால், இந்த தற்காலிகமானவர்களை என் ஆசானாக பாவிக்கிறேன். (7/8/12 - 10.20pm)