Tuesday, June 14, 2022

சிதறிய சிந்தனை

 வெகுநேரமாக இப்பேனா காகிதத்தில்

ஏதோ பொழிய நினைக்கிறது.
சிதறிய சிந்தனைகளை சீராக்க முயன்று
செயலற்று நிற்கிறது.
இன்று ஏனோ பார்க்கும் முகங்களும்
சூழலும் நினைவுகளும் எண்ணங்களும் இசையும் மனதிற்குள் ஒலிக்கும் பாடல்களும் நிகழ்காலத்தோடு ஒன்றிப்போகிறது.
மண்ணுக்குள் நீராய் கலக்கிறது மனம்.
பார்பவற்றை அப்படியே அள்ளிக்கொள்ளும் மனதை இந்நொடியை இக்காலத்தை
மோதுகின்ற சிலிர்காற்று தந்ததா?
கார்மேகம் சூழும் குதுகலத்தில் மயிலாடும் ஆட்டத்தை உற்றுநோக்கும் மனதை தொட்டுவிட்டு போகும் ஈரக்காற்று தந்ததா?
ஒவ்வொரு தூரலும் தூய்மையின் அடையாளமென்று
இலையின் மேநீரை முகம் தொடச் செய்யுது உயிரோட்டத்தை
மென்காற்று தந்ததா?
புதிதாகிற மனம் நேர்படுகிற பார்வை
கலங்கமறுக்கிற எண்ணம்
இயற்கை நம்மேல் நம்முள் நிகழ்த்தும்
அதிசய ரசாவாதத்தை வேரெது அளித்திடக்கூடும்.
நம்மிலும் மேலான சக்திக்கு இறைவன்
என்றோர் பெயரா? இல்லை
இயற்கை என்றோர் பெயரா?
அது சிந்தனையற்றது
இது சிந்தனையூட்டுவது.

No comments:

Post a Comment